Home / இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்

அருங்காட்சியகம் அமைக்க ஜனாதிபதி திட்டம் !!

சீதாவக்க இராசதானியினால் நம் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்றும் அடுத்த தலைமுறைக்கு அது தொடர்பான அறிவை வழங்கும் வகையில் சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 12 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் “சீதாவக்க – சிசு அருணலு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் …

Read More »

இடியுடன் கூடிய மழை !!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் …

Read More »

குடிநீர் கட்டணச் சீட்டில் மாற்றம் !!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பற்றுச்சீட்டுக்கு பதிலாக இணையத்தில் இலத்திரனியல் முறையில் அதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.

Read More »

28 அன்று தாமரை கோபுரம் இரு நிறங்களில் ஒளிரும் !!

புனித நபி முஹம்மது பிறந்தநாளான 2023 செப்டம்பர் 28ஆம் திகதியன்று தாம​ரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும் என்று தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More »

’’அவர் காற்சட்டையை நனைக்கும் சிசு போன்றவர்”: மைத்திரி !!

”பொன்சேகாவின் செயற்பாடு, எந்நேரமும் காற்சட்டையயை ஈரம் செய்யும் சிசுவைப் போன்றது. தன்மீதுள்ள அந்த அசுத்தத்தை துப்புரவு செய்ய அவருக்கு யாராவது உதவுவார்கள்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஏன் உங்களைக் குறிவைக்கிறார் என நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

நான் அவரின் காலில் விழவில்லை:பொன்சேகா !!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவம் தொடர்பில் அடிப்படை அறிவு கூட இல்லை. அதன் காரணமாகவே அவர் எனக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் நிலையை விமர்சிக்கின்றார். எனக்கு என்றாவது ஒரு நாள் அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட 100 …

Read More »

சட்டவிரோத மதுபான போத்தல்கள் ஏல விற்பனை !!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 18 ஆயிரத்திற்கும் அதிக மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. வருடத்தின் ஆரம்பம் முதல் சேகரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபான போத்தல்கள், அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன என சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இவற்றை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினால் ஏல நடவடிக்கை உட்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல்களை மதுவரி திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

’சனல் 4 குற்றச்சாட்டுக்கு தெரிவுக்குழு அமைக்கவும்’ !!

சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) விசேட அறிவித்தலொன்றை வெளியிட்ட அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், அங்கு மேலும் தெரிவிக்கையில், “சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் …

Read More »

வங்குரோத்துக்கு உங்கள் தந்தையும் பொறுப்பு: பிரசன்ன !!

நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு ஜனாதிபதியாக பணியாற்றிய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையும் காரணம் என்றும் வங்குரோத்து நிலைக்கு எதிர்க்கட்சிகளே பெரிதும் காரணம் என்றும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றம் வியாழக்கிழமை (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் நிதிப் பிரச்சினை ஏற்படும் …

Read More »

பிள்ளையானை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை?

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார கேள்வி எழுப்பினார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு …

Read More »

’தொங்கும் சனல் 4 கயிறு மரணக் கயிறாக மாறும்’ !!

அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது என்றும் சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் …

Read More »

40 சதவீதமானவர்கள் மாரடைப்பால் பலி !!

கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் பதுளை போதனா வைத்தியசாலையில் 40 சதவீதமானவர்கள் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையில் இதுவரை எஞ்சியோகிராம் பரிசோதனைகளை முன்னெடுப்பதில் தடங்கல்கள் காணப்படுவதாகவும் இதனால் ஊவா மாகாணத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாமல் போகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பதுளை …

Read More »

ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது !!

சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுச் செல்வதற்கு முயன்ற விமானப் பயணி ஒருவர், பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால், வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஆவார். அவர் டுபாயிலிருந்து வியாழக்கிழமை (21) காலை 05.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 …

Read More »

ரத்கம கொலை; இருவர் கைது !!

27 வயதுடைய இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது. குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை நெகிவத்தை கட்டுடம்பே பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட …

Read More »

பொலிஸ் திணைக்களத்தை மறுசீரமைக்க வேண்டும் !!

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சில அதிகாரிகள் குற்றவாளிகளின் பணியாளர்களாக இருப்பதாக வெளிவரும் தகவல்களைக் கேட்கும்போது, குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகள் போன்றே பொலிஸ் திணைக்களத்தையும் முறையான மறுசீரமைப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “மக்கள் பாதுகாப்பு தொடர்பில் தோற்றுவித்திருக்கும் மோசமான …

Read More »

’செந்திலின் அறிக்கை கோழைத்தனமானது’ !!

இனமோதலை ஏற்படுத்தும் சூட்சுமம் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்று அரசாஙகத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர் கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்த அவர், “யுத்தத்தை சமாதானமாக முடிக்க வேண்டும் என …

Read More »

ஜனநாயகம் பேசிவரும் ஜனாதிபதி ஒடுக்குகிறார் !!

ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாக பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஐநா கூறுகின்றது. ஆனால் அரசாங்கமோ அதனை …

Read More »

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது !!

பதினாறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய திருமணமான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி தனது தாயுடன் பியகம பெரக சந்திய பிரதேசத்தில் உள்ள விடுதி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், திருமணமான குறித்த இளைஞர் இந்த சிறுமியுடன் உறவைப் பேணியதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சந்தேக நபர் சிறுமி விடுதியில் இருக்கும்போது அவர் மீது இந்தக் குற்றத்தை செய்துள்ளமை விசாரணைகளில் …

Read More »

ஜனாதிபதி செயலகத்தில் 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யவில்லை !!

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களில் 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு வாகனங்கள் எனவும், ஒரு வாகனத்தின் பெறுமதி 25 முதல் 30 கோடி ரூபாய் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உயர் காப்பீட்டு வாகனங்களின் அதிக மதிப்பு காரணமாக, காப்பீட்டுக்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் செலுத்த …

Read More »

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் எம்.பிக்கள் பயணம் !!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், அவர்களில் பலர் ஜனாதிபதியின் முக்கிய சந்திப்புகளில் கலந்துள்ளதை புகைப்படங்களின் மூலம் காணமுடிகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி …

Read More »

செனலாக மாறிய வட்ஸ் அப் !!

கடந்த சில காலமாக வட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வட்ஸ் அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் “செனல்” வசதியைக் கொண்டு வந்துள்ளது. 150 நாடுகளில் இந்த செனல் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் செனல் போல் இது அமைக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் தளத்தில் இந்த வசதி ஏற்கனவே பல காலமாக இருக்கும் நிலையில், இப்போது வட்ஸ் அப் …

Read More »

’’சபைக்குள் ஆடையைக் கழற்ற முடியாது” !!

அண்மையில் ஒரு அமைச்சர் பாராளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற ஆடையை அணிந்து வருகை தந்ததாகவும் அவர் பாராளுமன்ற அறைக்குள் வைத்து தனது மேலங்கியைக் கழற்றியதாகவும் குற்றம் சுமத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அது அநாகரிகமான செயல் என்பதால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது ‘அந்த’ அமைச்சர் தனது மேலங்கியைக் கழற்றியதாக நளின் …

Read More »

திலீபனுக்கு கொழும்பில் தடை !!

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பு நகரத்தில் பல பகுதிகளில் நடாத்த முடியாதவாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்குமுகமாக, இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (19) கொழும்பு கோட்டை, கொம்பனித்தீவு மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திலீபனின் நினைவேந்தலை பல அமைப்புக்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More »

பிரிட்டன் முன்னாள் பிரதமர் வருகிறார் !!

எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டுபாய், அபுதாபி நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வில் விசேட அதிதியாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் கொழும்பு துறைமுக நகரத்தின் பெயரை ‘கொழும்பு நிதி நகரம் ‘என்று மாற்றியமைப்பதற்கும் ஆலோசிக்கப்படுவதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Read More »

இன்றைய வானிலை அறிக்கை !!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் …

Read More »

”2 ஆம் கட்ட நிதியைப் பெறுவது சிரமம்” !!!

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளில் 30 சதவீதம் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 70 சதவீத நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது. எனவே இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் …

Read More »

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தனது முகப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ‘ஜி77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு …

Read More »

2024 ஒக்டோபருக்குப் பின் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியாது !!

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களின் இறைமைக்கு அர்ப்பணக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி சட்டவிரோத ஜனாதிபதியாக இருப்பார். என்றார். நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த …

Read More »

ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பம் !!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் 21ம் திகதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி …

Read More »

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இருநாள் விவாதம் !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. பாராளுமன்றம் நாளை (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கூடவுள்ளது. ஆட்கள் பதிவு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2334/47 இல் வெளியிடப்பட்ட உத்தரவுகள் …

Read More »

பல்கலை மாணவி தன்னுயிரை மாய்த்தார் !!

கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகளில் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மாணவியே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவி அவரது சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Read More »

மசாஜ் நிலையம் சென்ற தாய்லாந்து யுவதி துஷ்பிரயோகம் !!

உனவடுன – யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் மசாஜ் நிலையமொன்றில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த 38 வயதான அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் மசாஜ் மையத்தின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக ஊழியரும் கைது செய்யப்பட்டார், அதற்கு உதவியதற்காக உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டுப் பெண் நேற்று (16) …

Read More »

தயாசிறிக்கு உயிர் அச்சுறுத்தல்?

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை, தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அவரிடம் உள்ள குறைபாடேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Read More »

தோட்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் குளவி கொட்டுக்கு இலக்கு !!

ஹட்டன் – நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட உதவி அதிகாரி மற்றும் களஞ்சிய பொருப்பாளர் ஆகிய இரண்டு பேரும் இன்று மாலை 4.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதையடுத்து இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறினார்கள் என மாவட்ட வைத்தியசாலையில் உள்ள அதிகாரி தெரிவித்தார்.

Read More »

திடீரென பசிலை சந்தித்தார் பிரதமர் !!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பிரதமர் தலைமைத்துவம் வகிக்கும் மஹஜன ஐக்கிய முன்னணியும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது !!

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இலங்கை தனது மறுசீரமைப்பு முயற்சிகள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும் முதலீடுகளை கவர்வதற்கும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட எதிர்பார்க்கிறது என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். ‘அண்மைய உயர் நிலை சுற்றுப்பயணங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தின் நோக்கு’ என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் …

Read More »

ராஜபக்ஷ குடும்பத்தை தண்டிக்க வேண்டும் !!

கோட்டபாய ஜனாதிபதியாக இருக்கும் போதும், அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போதும் பல கொடுமைகளை எங்களது மக்களுக்கு இழைத்திருக்கின்றார் என்றும் அந்தக் குடும்பம் மற்றும் அதில் சம்மந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் சர்வதேச விசாரணையில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது …

Read More »

65 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு !!

2023 ஜனவரி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வறட்சி, கடும் மழை மற்றும் பீடைகள் காரணமாக 65 ஆயிரத்து 871.32 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய பயிர்களும் 67 ஆயிரத்து 122 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பதிவாகிய பயிர் சேதங்கள் தொடர்பாக கமநல காப்புறுதி சபை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 26 ஆயிரத்து 813.67 …

Read More »

கனேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்கவில் கைது !!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் என்றழைக்கப்படும், கனேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை மாலை 5.46 மணியளவில் வந்தடைந்தார். போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த அவர், குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »

ஐ.நா கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரை !!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் …

Read More »